search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் சோதனை"

    • விவசாய நிலத்தில் கேட்பாரற்று இருந்த கார்.
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள சொரக்காயல்நத்தம் கிராமத்தில் சிவா என்பவருக்கு விவசாய நிலம் அப்பகுதியில் உள்ளது. இந்தநிலையில் விவசாய நிலத்தில் கேட்பாரற்று கார் ஒன்று இருந்து.

    இதுகுறித்து சிவா போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் 3 செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து வாணியம்பாடி போலீசார் காரையும் அதிலிருந்த செம்மர கட்டைகளையும் பறிமுதல் செய்து திம்மாம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து செம்மரக் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார், கார் யாருக்கு சொந்தமானது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×